தமிழகம்

அதிகாலையில் அலறிய குழந்தைகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் : நள்ளிரவில் நடந்த கொடூரம்!

ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் கண்டு அலறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்டு வந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த மூடினாம்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயசு44) சசிகலா (வயது34) இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்

மனைவி மீது சந்தேகம் அடைந்து கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தில் தினமும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியதில் மனைவி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்

இதையும் படியுங்க: முதலமைச்சர் தனது சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடுகிறார் : முன்னாள் பெண் அமைச்சர் சரமாரி புகார்!

இவரின் பிள்ளைகள் காலை தூங்கி எழுந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் இறந்த தாயைக் கண்டு கதறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து கேவிகுப்பம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்

தகவலின் பேரில் விரைந்து வந்த கேவிகுப்பம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மனைவியை கொலை செய்து விட்டு அங்கே சுற்றித்திரிந்த தியாகராஜனை கைது செய்து கே வி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காதல் மனைவி மீது சந்தேகம் அடைந்து ஆத்திரத்தில் கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.