BSNL அதிகாரி வீட்டில் துணிகரம்.. 50 சவரன் நகைகள் கொள்ளை : CCTV காட்சிகளை வைத்து தேடும் போலீஸ்!
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள சேரன் நகர் பகுதியில் வசிப்பவர் பாலாஜி (46), இவர் பொள்ளாச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்று அருகில் இருந்தவர்கள் பாலாஜி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பாலாஜிக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த பாலாஜி வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 50 சவரன் தங்க நகைகள் கொள்ளயடிக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர் மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு பாலாஜி தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாயுடன் வந்த போலீசார் தடயங்களை சேகரிக்கப்பட்டது.
மேலும் பாலாஜி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.