கேரள மாநிலத்தில் கார் மீது புல்லட் மோதி புல்லட்டிலிருந்த நபர் சாலையில் விழுந்த போது பின்னால் வந்த மினி லாரி மோதி விபத்தின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவிலுள்ள பந்தளம் எம்சி சாலையில் நேற்று மாலை 4 மணிக்கு பிரதீப் என்பவர் தனது புல்லட்டில் சென்ற போது முன்னாள் சென்ற கார் மீது மோதியுள்ளார்.
இதில் புல்லட்டிலிருந்து கீழே விழுந்த பிரதீப் மீது பின்னால் வந்த மினிலாரி மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்தவரை பந்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரதீப், மீண்டும் கேரளா திரும்பி வந்து மர வியாபாரம் செய்து வந்தார்.பின்னர் விபத்திற்கு பிறகு நிற்காமல் சென்ற மினி லாரியை செங்குன்றம் போலீசார் தடுத்தி நிறுத்தி ஓட்டுநரை கைது செய்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.