தமிழகம்

நான் எப்படியாவது பந்து வீசுவேன்…நெகிழ்ச்சி அடைய செய்த பும்ரா…ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..!

காயத்தோடு களமிறங்கும் சிங்கம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது.இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக்கோப்பை போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

இதனால் ஆட்டத்தின் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.இன்று நடந்த 2 ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளிக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக வெளியே சென்றார்.உடனே அவரை மருத்துவக்குழு ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.

தற்போது ஸ்கேனில் பும்ராவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் இது தசைப்பிடிப்பு மாதிரி தான் உள்ளது என ரிசல்ட் வந்துள்ளது.இருந்தாலும் பும்ராவுக்கு ஏற்கனவே முதுகில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டாம் என இந்திய அணியின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியும் 6 விக்கெட்களை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது ஒரு வேளை இந்திய அணி 250 ரன்களுக்கு குறைவாக இலக்கை நிர்ணயித்தால்,பும்ரா இல்லாமல் மற்ற பவுலர்கள் எப்படி சமாளிப்பார்கள் என கேள்வி எழுந்துள்ள நிலையில்,”பும்ரா என்னுடைய உடல்நிலை குறித்து கவலை இல்லை நான் வலிநிவாரண ஊசி போட்டு எப்படியாவது பந்து வீசுவேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!

மேலும் சாம்பியன்ஸ் கோப்பை அடுத்த மாதம் தொடங்க இருப்பதால் இந்த ஒரு ஆட்டத்தில் பும்ராவை விளையாட அனுமதித்து ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.ஆனால் பும்ரா நான் குறைந்த ஓவர்களை வீசிக்கொள்கிறேன் என கூறிருக்கிறார்.

பும்ராவின் இந்த உறுதியான செயலால் அணியில் உள்ள மற்ற வீரர்கள் நெகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல்,ரசிகர்கள் பலர் பும்ராவுக்காக இந்திய அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என வேண்டி வருகின்றனர்.நாளைய ஆட்டத்திலே இந்திய அணி வெற்றி பெறுமா பெறாத என்பது தெரிந்து விடும்.இதனால் நாளை நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என கூறப்படுகிறது.

Mariselvan

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

3 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

3 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

4 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

5 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

5 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

6 hours ago

This website uses cookies.