தமிழகம்

6 பொணத்த காணோம்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே புதைத்த ஆறு உடல்கள் காணாமல் போய்விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பூத்தாம்பட்டி அருகே உள்ள ஏ.டி.காலனியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (50) – கற்பகம் (45) தம்பதி. இந்த தம்பதியின் மகன் விஸ்வநாதன் (19), இவர் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில், இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், அவரின் சடலத்தை புதைப்பதற்காக புத்தாம்பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்று பார்த்தபோது தங்கள் முன்னோர்கள் 7 பேரின் சடலங்களை, மணல் கொள்ளையர்கள் மணலுடன் சேர்த்து அள்ளிச் சென்றுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ‘நான் ‘ பட பாணியில் தாயை ‘அந்த ‘ நிலையில் பார்த்த மகன்.. கோர்ட் அதிரடி!

மேலும், மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே, தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம், மணல் கொள்ளை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதாவது, தமிழகத்தைச சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .

தமிழகம் , பஞ்சாப் , மத்திய பிரதேசம் , மகாராஷ்டிரா , ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த 5 மாநிலங்களில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தவும் அவர் கோரியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.