Categories: தமிழகம்

இறந்த 100 பேரை தடயமே இல்லாமல் புதைப்பா? மனநலக் காப்பகத்தில் மர்மம் : பந்தலூரில் பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு டாக்டர் அகஸ்டின்(வயது60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 100க்கு மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அவர்கள் காப்பகம் அருகில் புதைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மன நல மருத்துவர் விவேக், தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, இந்த மன நல காப்பகம் முறையான அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த காப்பகத்தில் இருந்த 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.இந்த காப்பகத்தில் இருந்த 20 பேர் எப்படி இறந்தார்கள்? இறப்புக்கான காரணம் என்ன? அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? என்பது மர்மமாகவே உள்ளது.

விசாரணை நடத்திய பிறகே இந்த காப்பகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அனுமதியின்றி காப்பகம் நடத்தி வந்த அகஸ்டின் அண்மையில் புதர் என்ற திரைப்படத்தை ரூ 2.43 கோடி செலவில் தயாரித்துள்ளார். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் அகஸ்டினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

7 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

7 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

8 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

8 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

8 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

9 hours ago

This website uses cookies.