தமிழகம்

ஓடும் பேருந்தில் உடைந்த கண்ணாடி.. பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் : வீடியோ!!

ஓடும் பேருந்தில் காற்று வேகமாக அடித்ததால் கண்ணாடி உடைந்து ஓட்டுநர் காயமடைந்த போதும் சமயோஜிதமாக செயல்பட்டு பயணிகள் காப்பாற்றப்பட்ட வீடியோ வைரல்

கோவை – திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக் கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த ஏ.எஸ்.எம் என்ற தனியார் பேருந்தில் 65 பயணிகளுடன் தொண்டாமத்துரைச் சேர்ந்த 32 வயதுடைய சுரேந்திரன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார்.

அப்பொழுது தென்னம்பாளையம் அருகே வரும் பொழுது பேருந்தின் முன் பக்க கண்ணாடி அதிகமாக காற்று வீசியதால் தானாக உடைந்து நொறுங்கி விழுந்தது, அப்பொழுது ஓட்டுநர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் பட்டு தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது.

அப்பொழுது பயணிகளின் உயிரைப் பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருள்படுத்தாமல் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி பயணிகளின் உயிரை பாதுகாத்து காப்பாற்றினார்.

அவரை பாராட்டிய பேருந்து பயணிகள், அங்கு உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ஓட்டுநர் சுரேந்திரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.