போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பேருந்துகள் தாமதமானதால் கரூர் பேருந்து நிலைய விசாரணை அலுவலகத்தில் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை வழக்கத்தை விட சற்று கூடுதலாக காணப்பட்டது. தொலைதூரப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பொதுமக்கள் குவிந்ததால் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும், மாவட்டத்திற்குள் செல்லும் ஒரு சில பேருந்துகள் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பேருந்து நிலையத்திற்குள் வருவதற்கு தாமதமானதால், பேருந்து நிலைய விசாரணை அலுவலகம் முன்பு பயணிகள் குவிந்து அங்கிருந்த ஊழியர்களிடம் தங்கள் ஊருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.