Categories: தமிழகம்

கடைகளை திரும்ப வழங்க கோரி முதலமைச்சரை சந்திக்க நடைபயணம்: டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் கைது!!

தங்கள் கடைகளை தங்களுக்கே வழங்க வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க சென்னை நோக்கி நடைபயணம்- டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் கைது.

கோவை பெரியகடைவீதியில் செயல்பட்டு வரும் டி.கே.மார்க்கெட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோரம் கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் காய்கறி பழங்கள் வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்க்கெட்டில் கடைகளை ஏலம் எடுத்துள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் கடைகள் அமைத்து தருவதாக முந்தைய அதிமுக ஆட்சியில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு முன்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றதால், கோவை மாநகராட்சி சார்பில் அக்கடைகளை டெண்டர் மூலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பால் தங்கள் கடைகள்(88 கடை வியாபாரிகள்) தங்களுக்கு கிடைக்காது என்றும் முதல்வர் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகளை தங்களுக்கே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று கோவையில் இருந்து முதலமைச்சரை சந்திக்க சென்னை அண்ணா சமாதி வரை குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொள்ள போவதாக காய்கனி சிறுவியாபாரிமள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.

அறிவித்ததை போல் இன்று கோவை அண்ணா சிலை அருகில் இருந்து குடும்பத்துடன் நடைபய்ணம் மேற்கொள்ள முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்குற்கு அழைத்து சென்றனர். நடைபயணம் மேற்கொள்வதற்கு முன்பு அவரது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் கலந்து கொண்டு உங்களது கோரிக்கையை தாங்களும் முதலமைச்சரிடம் தெரியபடுத்துகிறோம் என தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.