மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் அல்லது ஹெலிகாப்டரில் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியுள்ளார்.
விழுப்புரம்: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கலந்து கொண்டார்.
இதனையடுத்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் பெண்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய என்.ஆனந்த், “தமிழக வெற்றிக் கழத்தில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் 34 இடங்களில் விலையில்லா உணவகம் மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக வெற்றிக் கழகம் செயல்படுத்தி வருகிறது. மேலும், பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தவெகவில் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், உழைப்பவர்களுக்கு தான் கட்சியில் பதவி வழங்கப்படும். மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் அல்லது ஹெலிகாப்டரில் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது” எனத் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுக்கு தற்போது தவெகவுக்குள்ளே புயல் கிளம்பியுள்ளது. காரணம், விசிகவில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் விலகி விஜயின் தவெகவில் இணைந்த ஆதர் அர்ஜுனாவுக்கு தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு, விஜய் செல்லும் இடங்களில் முன்வரிசையிலும் நிற்கிறார்.
இதையும் படிங்க: கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!
அதேபோல், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது எனக் கூறியிருப்பது வெறும் கண்துடைப்பு எனக் கூறுகின்றனர்.
அதேநேரம், திமுக, நாதக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் இருந்து மேலும் சிலர் விலகி தவெகவில் இணைய உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறி, திமுக உள்கட்டமைப்பு பணிகளை முடுக்கிவிடும் நிலையில், ஆனந்தின் இந்தப் பேச்சு தவெகவுக்கு பின்னடைவாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.