பரபரப்பாக காணப்படும் பின்னலாடை நிறுவனம்.. தொழிலாளர்கள் ஊருக்கு சென்றதால் வெறிச்சோடியது!!!
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மதுரை, தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சகணக்கான மக்கள் திருப்ப்பூரிலேயே தங்கி பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
இதுதவிர திருப்பூரில் உள்ள உணவகங்கள்., மளிகை கடைகள். உள்ளிட்ட கடைகளையும் பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கள் பண்டிகைகளுக்கு மட்டுமே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக , பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை.
மேலும், தொழிலாளர்கள் தங்கள்து சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றதால் திருப்பூர் பிரதான சாலைகளான குமரன் சாலை., காதர் பேட்டை. அரிசி கடை விதி., பழைய பேருந்து நிலையம்., உள்ளிட்ட பகுதிளில் வாகன போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.
அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளிவில் உள்ள கொங்கு மெயின் ரோடு., சிட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும், சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனைக்கு பெயர் போன, காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது.
விடுமுறை முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் இவ்வார இறுதியில் வந்த பின்னரே திருப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.