Categories: தமிழகம்

இறைச்சிக் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : திருடிய நகைகளை தங்கக் கட்டியாக மாற்றிய பலே திருடனை வளைத்தது போலீஸ்!!

கோவை : இறைச்சி கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த கில்லாடி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்,

கோவை சிங்காநல்லூர் நந்தனம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ். இவர் அந்த பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கம்போல், சுரேஷ் தனது இறைச்சிக்கடைக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் அனைவரும் வெளியே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தனர். இந்நிலையில் பட்டபகலில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் 37 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சுரேஷ் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பட்டப்பகலில் ஒரு மர்மநபர் சுரேஷின் வீட்டில் கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கோவை இருகூர் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் சுற்றுவதாக ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சுந்தர் என்ற புறா சுந்தர் என்பது தெரியவந்தது.

மேலும் இவரிடம் இருந்து சுரேஷின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 37 சவரன் தங்க நகையில், 18.5 பவுன் தங்க நகையை தங்க கட்டியாக பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. அடுத்து கோவை சிங்காநல்லூர் போலீசார் சுந்தர் மீது கொள்ளை வழக்கு பதிவு செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

19 minutes ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

17 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

18 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

18 hours ago

This website uses cookies.