Categories: தமிழகம்

தேர்தல் பத்திர விவகாரத்தை திசைத்திருப்ப சிஏஏ சட்டம் : தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

தேர்தல் பத்திர விவகாரத்தை திசைத்திருப்ப சிஏஏ சட்டம் : தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

எஸ்பிஐ தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக CAA சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களை ஏன் CAA-வில் சேர்க்கவில்லை ; இந்தி பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதி, தமிழ் பேசும் இந்துக்களுக்கு நீதியா என செல்வப்பெருந்தகை கேள்வி.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற பயிற்சி முகாமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த் செல்வப்பெருந்தகை, நான்கு ஆண்டுகளாக CAA சட்டத்தை தள்ளி வைத்து விட்டு தேர்தல் நேரத்தில் கொண்டு வருவதற்கான காரணம் என்ன என கேள்வியெழுப்பினார். இலங்கை தமிழர்களை ஏன் CAA-வில் சேர்க்கவில்லை என்றும் இந்தி பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதி, தமிழ் பேசும் இந்துக்களுக்கு நீதியா என கேள்வியெழுப்பினார். வீரபாண்டியனை காட்டிக்கொடுத்த எட்டப்பனை போல் அண்ணாமலை தமிழர்களை காட்டிக்கொடுக்கிறார்.

CAA சட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தது. அதிமுக மட்டுமே ஆதரித்தது என்றும் அதிமுகவும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 14வது பிரிவை ஏன் புறக்கணிக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறார்கள். மோடி, அமித்ஷா பேச்சை கேட்டுக்கொண்டு அண்ணாமலை எட்டப்பனாக மாறி வருகிறார் என்றும் அண்ணாமலை ஏன் தமிழர்களின் உரிமையை சிதைக்கிறார்.

இலங்கை தமிழர்கள் யார் அண்ணாமலை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் நலனை மோடியும், அண்ணாமலையும் புறக்கணிக்கின்றனர். எஸ்பிஐ தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக CAA சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.

மகளிர் உரிமத்தொகையை பிச்சை என விமர்சித்த நடிகை குஷ்பூ மகளிர் மீது அக்கறை இல்லாத மகளிர் என விமர்சித்தர். தமிழ்நாட்டி பிரச்சாரத்திற்கு வரும் மோடி தமிழ்நாடு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் நலனை மோடியும், அண்ணாமலையும் புறக்கணிக்கின்றனர். எஸ்பிஐ தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக CAA சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் என கூறினார்.

பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடாமல் விலகி வருகின்றனர் என்றும் எதை தின்றால் பித்தம் தெளியும் என தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி பெரு வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் வருகை தந்தாரா என கேள்வியெழுப்பினார். போதை பொருளின் துவக்க புள்ளியே பாஜகதான். ஒன்றிய அரசின் அனைத்து துறைகளையும் மீறி போதைப்பொருள் எப்படி இந்தியா வருகிறது.

2021ம் ஆண்டும் தமிழ்நாடு அரசு CAA சட்டம் நடைமுறைபடுத்தப்படாது என தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஓரிரு நாட்களில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்படும் என்றும் விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு வழங்கப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

27 minutes ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

37 minutes ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 hour ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

2 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

2 hours ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…

3 hours ago

This website uses cookies.