சைதாப்பேட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த சிறுவனின் சகோதரிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்க ரூ.1000 லஞ்சம் கொடுத்ததாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது, எழும்பூர் ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டார்கள் என்பது முற்றிலும் தவறானது.
வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற ரூ.1000 டெபாசிட் வாங்கப்படும். அதன் பிறகு பரிசோதனைகள் தேவைப் பட்டால் அதற்கும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது.
இது எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் இருப் பதுதான். இந்த உண்மையை உணராமல் திரித்து சொல்வது வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி தவறான குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும்.
அரசு ஆஸ்பத்திரிகள் நமது ஆஸ்பத்திரி. அவை சிறப்பாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். சைதாப்பேட்டை சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்க வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தொழிலாளர் முகாமில் 625 குடும்பங்கள் வசிக்கிறது. மொத்தம் 1300 பேர் இருக்கிறார்கள். வேறு யாருக்கும் உடல்நல பாதிப்பு இல்லை என்பதை வீடு வீடாக சென்று சோதனை நடத்தி கண்டறியப்பட்டு உள்ளது. சிறுமி உயிரிழந்த தற்கு காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரிய வரும் என கூறினார்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.