நந்தன் படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதை குறையாக கருதாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு குரல் கொடுக்க வேண்டும் என சினிமா இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாதிய வன்கொடுமைக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் ஒற்றை மனுஷியாய் போராடுகிறார்.
பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டியும் அவமரியாதை செய்திருக்கிறார்கள்.
இது என்றைக்கோ நடந்தது அல்ல, 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நம் கண் எதிரே நடக்கிற துயரம்… ‘நந்தன்’ படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதைக் குறையாகக் கருத வேண்டாம்.
‘நந்தன்’ படத்தில் காட்டியதைப் போல் ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலருக்கும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
உடன் நிற்க ஒருவர்கூட இல்லாமல், ஓர் அநாதை போல் பஞ்சாயத்து தலைவி அமர்ந்து போராடுவது ஏன் எவர் மனதையும் அசைக்கவில்லை?
என்றைக்கோ நடந்தது, எங்கேயோ நடந்தது என இனியும் ஈயம் பூசாமல், தயவுகூர்ந்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கொடுவினைகளுக்கு முடிவு கட்டுங்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.