வேலூர் : குடியாத்தம் அருகே வாழைத் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வாட்ஸ் அப்பிற்கு, குடியாத்தம் அருகே அக்ரவாரம் கிராமத்தில் முனியன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் ஏராளமான கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வந்தது.
இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான காவலர்கள் ரகசியமாக சென்று அக்ரவாரம் கிராமத்தில் முனியன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் சோதனை மேற்கொண்ட போது வாழை தோட்டத்தின் நடுவே சுமார் 40 கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து கஞ்சா செடிகள் அனைத்தையும் வேரோடு பிடுங்கிய காவல்துறையினர் அதை குடியாத்தம் நகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிலத்தின் உரிமையாளர் முனியனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இது போன்ற சமூக விரோத செல்களை தடுக்க மாவட்ட காவல் துறை அறிவித்துள்ள 9092700100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் அது ரகசியம் காக்கப்படும் என்றும் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.