ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னையைச் சேர்ந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே கடந்த 6ம் தேதி நள்ளிரவு சென்னையை சேர்ந்த ஜான் பிரங்க்ளின் (27) என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த ராகுல் (22), திவாகர்(21), அரக்கோணம் புதுப்பேட்டையை சேர்ந்த சத்யா (22), அரக்கோணம் புளியமங்கலத்தை சேர்ந்த செல்வம் (25), அரக்கோணம் அம்மனூரை சேர்ந்த தர்மேஷ்(20) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரனை நடத்தினர்.
விசாரனையில் சென்னையில் கஞ்சா விற்பனையில் ஏரியா பிரிப்பதில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், முன் விரோதம் காரணமாக ஜான் பிராங்கிளின் வெட்டி படுகொலை செய்ததாக தெரிய வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர். பல நாட்களாக ஜான் பிரங்க்ளினை தேடி வந்ததாகவும், அவன் அரக்கோணத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்து கொலை செய்ததாக கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரனையில் கொலைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும், கொலையாளிகளிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து அரக்கோணம் நகர காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.