உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது… தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டிய மதிமுக!!
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் ம.தி.மு.க. குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜூனராஜ், செந்திலதிபன், அந்திரிதாஸ், சேஷன் ஆகிய 4 பேர் கொண்ட குழு பங்கேற்றனர். திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு பின், திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மக்களவை தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகளை கேட்டுள்ளோம். 2 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கக் கேட்டுள்ளோம். இந்த முறை எங்கள் கட்சி சின்னத்தில்தான் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதுதான் கட்சி நிலைப்பாடாக உள்ளது, இதுகுறித்து திமுக குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர். கடந்த முறை ஈரோடு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவுக்கு திமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.