குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் சாலையில் நிலை தடுமாறி கார் பள்ளத்துக்குள் கவிழ்ந்தது விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழக வந்துள்ள குடியரசு தலைவர் திரெபதி முர்மு மதுரை விமான நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குடியரசுத் தலைவர் வருகையோட்டி அவனியாபுரம் – அருப்புக்கோட்டை சாலையில் வாகனம் செல்ல அனுமதிக்காமல், அவனியாபுரம் செம்பூரணி சாலை வழியாக வைக்கம் பெரியார் நகர், ரிங் ரோடு அடைந்து, மண்டேலா நகர் செல்ல போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், அவனியாபுரம் செம்பூரணி ரோடு சந்திப்பில் வைக்கம் பெரியார் நகர் ரோட்டில் குடியரசுத் தலைவர் வரும் பாதையில் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் அறிந்த அவனியாபுரம் காவல்துறையினர் அந்தக் காரை பளுதூக்கும் இயந்திரம் வைத்து தூக்கி, அந்த காரை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
குடியரசுத் தலைவர் செல்லும் பாதையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக விபத்து நடந்ததால், அந்த இடத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.