அதிவேகமாக கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான நிலையில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கோவைப்புதூரில் இருந்து தனியார் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர், நேற்று முன்தினம் மாலை, கல்லூரி முடித்து விட்டு, ஒரு காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
புட்டு விக்கி சாலையில் கார் வந்து கொண்டு இருந்த போது, ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது கார் எதிரே வந்த ஆட்டோ மீது வேகமாக மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர குளக்கரை தடுப்பில் மோதி, தடுப்பு கம்பிகளை உடைத்தபடி நின்றது. அதில் ஆட்டோ டிரைவர் படுகாயங்களுடன் அந்த குளத்துக்குள் தூக்கி வீசப்பட்டார்.
ஆட்டோவில் இருந்து மற்றொருவரும் படுகாயம் அடைந்தார். கல்லூரி மாணவர்கள் வந்த காரும் எதிர் முட்புதர் பாய்ந்து நின்றது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் சிறிது காயம் அடைந்தனர்.
மேலும் உயிருக்கு போராடிய குனியமுத்துரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஃபீக் மற்றும் ஆட்டோக்குள் இருந்த செல்வபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு பேரையும், அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் ரஃபீக் நேற்று பரிதாபமாக இறந்தார்.
சீனிவாசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த மாணவர் ஜோசப் மீது, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து காரணமாக புட்டு விக்கி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குளக்கரை சாலையில் வாகனங்களில் வருபவர்கள், மிதமான வேகத்தில் வருமாறும், அதிவேக வேகத்தில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்து உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.