திருப்பூர் அருகே கார் – அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையம் கிராமம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் ஓலப்பாளையத்தில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியது.
இதில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இதில் திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 60), அவரது மனைவி சித்ரா (57), இளவரசன் (26), அரிவித்ரா (30), மூன்று மாத பெண் குழந்தை சாக்சி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சந்திரசேகரின் 60 வத பிறந்தநாளையொட்டி அவர்கள் திருக்கடையூர் சென்று காரில் திருப்பூர் திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக கோவை- திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.