புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஒடிய கார் மோதியதில் மூன்று வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் பலி இர்ணடு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்
கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அப்சூலா ஹமித். ஒட்டுனரான இவர் தனது காரை எடுத்து கொண்டு கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி இன்று காலை வந்து கொண்டிருந்தார். அப்போது தவளக்குப்பம் எடையார் பாளையம் பகுதி அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த 3 இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மூன்று இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான ரவிசந்திரன் (56) அருகே இருந்த ஆற்றில் தூக்கி விசிப்பட்டார்.
இதனை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டதில், அதிக அளவில் ரத்த கசிவு ஏற்ப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்ப்படுத்தி விட்டு தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கிய மற்ற இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
This website uses cookies.