தமிழகம்

மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்-அண்ணாமலை மீது பாய்ந்த திடீர் வழக்கு!

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு, இந்து முன்னணியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். 

இம்மாநாட்டில் அண்ணாமலை முருகன் குறித்து மட்டுமல்லாது அரசியல் குறித்து பல விஷயங்களையும் பேசினார். மேலும் இந்த மாநாட்டில் தமிழக கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த மாநாட்டில் அரசியல், மதம் ஆகியவற்றை குறித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போல் பேசக்கூடாது என மாநகர காவல் துறை நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் அதையும் மீறி முருகன் மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை உட்பட பலரும் பேசியதாக சர்ச்சைகள் எழுந்தது.

இந்த நிலையில் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சையாக பேசியது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மத ரீதியாக பகைமையை உண்டாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் மாநகர காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

14 hours ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

15 hours ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

16 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

16 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

17 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

18 hours ago

This website uses cookies.