அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது வழக்குப்பதிவு : 3 பிரிவுகளில் வழக்கு போட காரணம் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2023, 11:33 am
EPS -Updatenews360
Quick Share

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்து காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2021 சட்டசபை தேர்தலின் போது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக வழக்கறிஞர் மிலானி என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 219

0

0