கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : கைதான த.பெ.தி.க.வை சேர்ந்த 7 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் பாஜக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடக்கழகத்தைச் சேர்ந்த ஜீவா (எ) ஜீவானந்தம் (34), கோபால் (எ) பாலன் (41), கவுதம் (எ) கவட்டய்யன் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
பெரியாருக்கு எதிராக பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரணைக்கான அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி டி.சசிரேகா தீர்ப்பளித்தார். அதில், கோபால், ஜீவா, கௌதம் ஆகிய மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.