தகாத உறவில் இருந்த நபருடன் அட்ஜஸ்ட் செய்து கொள் என தாயாரே கூறியதால் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பாக்யராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண் ஊழியர், தனது கணவருடன் விவாகரத்தாகி இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
இதனிடையே, பாக்யராஜ் அந்த பெண் ஊழியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபரில், வழக்கமாக பெண் ஊழியரின் வீட்டிற்கு வந்த பாக்யராஜ், அவர்களது மகள்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கு இருந்த அந்த பெண் ஊழியரின் கல்லூரி படிக்கும் 21 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பாக்யராஜ் கன்னத்தில் அடித்து வெளியே விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். ஆனால், அவரது தாயோ பாக்யராஜிடம் அட்ஜஸ்ட் செய்து கொள் எனக் கூறியதால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, இது குறித்து எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: COME BACK கொடுத்தாரா சங்கர்…”கேம் சேஞ்சர்”படத்தின் திரை விமர்சனம் இதோ…!
இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கையில், கல்லூரி மாணவி குறித்து பாக்ராஜ் அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்தும் கல்லூரி மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நேற்று எழும்பூர் மகளிர் போலீசார் பாக்யராஜ் மற்றும் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.