தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 13-ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார்.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தார்.
அப்போது சுற்றுப்பயணம் தொடர்பாக மனு அளிப்பது காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்பது இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்வது தொடர்பாக வருகை புரிந்தார்.
புஸ்ஸி ஆன்ந்தை வரவேற்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான த.வெ.க தொண்டர்கள் குவிந்தனர். விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லியும் த.வெ.க தொண்டர்கள் கலைந்து செல்லாமல் அங்கே கூட்டமாக கூடினர்.
மேலும், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற த.வெ.கவினர் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியும், வாகனங்களை நிறுத்தியும், பொதுமக்களுக்கு இடையே ஏற்படுத்தினர்.
தொடர்ந்து விமானத்திற்கு வெளியே உள்ள கோயிலில் புஸ்ஸிஆனந்த் சாமி தேசம் செய்த பின்பு வெளியே வந்த போது காவல்துறையினருக்கும் தொண்டர் கடைய வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியும், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தும், சட்ட விரோதமாக ஒன்று கூடியும் , காவல்துறையினரிடம் வாக்கு வாதம் செய்ததாக த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய காவல்துறையினர் 4பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.