Categories: தமிழகம்

பொங்கலுக்கு ரொக்கப் பணம்? எவ்ளோ தெரியுமா? திடீர் முடிவை மாற்றிய திமுக அரசு : நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது.

அதன்படி, இந்தாண்டு பொங்கலுக்கு மளிகை உட்பட, 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அதில், வெல்லம் உள்ளிட்ட பல பொருட்கள் தரமற்று இருந்தன. பல லட்சம் பேருக்கு துணி பை கிடைக்கவில்லை. இது குறித்து திமுக அரசு மீது பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்தனர்.

எனவே, வரும் பொங்கலுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய் ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் அடங்கியபரிசு தொகுப்பை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. கார்டுதாரர்களின் வங்கி கணக்கில், பணத்தை நேரடியாக செலுத்த அரசு திட்டமிட்டது.

ஆனால், ‘வங்கியில் வழங்கினால், கிராமங்களில் வசிப்போர் பணம் எடுக்க சிரமப்படுவர், ரொக்கமாக கொடுத்தால் தான், அரசுக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைக்கும்’ என,… ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதனால், வங்கி கணக்கு இல்லாத கார்டுதாரர்களுக்கு, வங்கி கணக்கு துவங்கும் பணி மும்முரமாக நடந்தாலும், வரும் பொங்கலுக்கு மட்டும், ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது….

இருப்பினும், பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன இடம்பெற உள்ளன என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கார்டுதாரர்கள் மட்டுமின்றி, உணவு, கூட்டுறவு துறையில் உள்ள அதிகாரிகளிடமும் நிலவுகிறது. இதனால், அவர்கள் பொங்கல் பரிசுக்கான முன் ஏற்பாடுகளில் தீவிரம் காட்டாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு, நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.