திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் சாதிய பாகுபாடி காட்டுவதாகக் கூறி, ஒருவார காலமாக மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாத நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தத்தமஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில் 71 மாணவர்கள் படித்து வந்த நிலையில், 19 பழங்குடியின மாணவர்கள் தலைமை ஆசிரியர் பாரபட்சம் காட்டுவதாக கூறி, ஒரு வார காலமாக அவர்களை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்பவில்லை.
தற்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாததால், பள்ளிக்கு ஒருவர் கூட படிக்க வராததால் பள்ளி வெறிச்சோடியது. பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், வட்டாரக் கல்வி ராஜ்குமார் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பெற்றோர்களுடன் சமரசம் மேற்கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியை ஜாதிய ரீதியில் பாகுபாடு காட்டவில்லை என்றும், அதனால் அவரை அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி மற்றொரு தரப்பினர் 50 மாணவர்களை இன்று பள்ளிக்கு அனுப்பாததால், பள்ளிக்கு ஒரு மாணவரும் வராததால் பெற்றோர்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும், பழங்குடியின குடும்பங்களிடம் நேரில் சென்று மாணவர்களை பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தினர். பின்னர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் சமரசத்தை ஏற்று நாளை முதல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதாக இருதரப்பை சேர்ந்த பெற்றோர்களும் தெரிவித்தனர்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.