Categories: தமிழகம்

யாரு வேணா சாப்பாடு போடட்டும்.. ஆனா நீ போடக்கூடாது; அன்னதானம் வழங்குவதில் சாதிய பிரச்சினை..!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதில் ஏற்பட்ட சாதிய பிரச்சினை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக இந்த கோவிலில் கொடியேற்றத்திற்குப் பின்பு தினம் தோறும் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.

இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் அன்னதானம் வழங்குவதற்காக சமையல் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, உயர்சாதியினர் நீங்கள் யார் எந்த ஊர் என்று விசாரித்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை அறிந்து நீங்கள் எல்லாம் இன்றைக்கு அன்னதானம் வழங்க கூடாது என தெரிவித்து இன்று கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சார்பில் அன்னதானம் வழங்க வேண்டும், ஆனால் நீங்கள் எதற்காக அன்னதானம் வழங்குகிறீர்கள் என்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

அங்கு வந்த காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் சமையல் செய்யும் இடத்திற்கு சென்று எரிந்து கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் எரிவாயுவை அணைத்தனர். பின்பு அவர்களை கோவிலுக்குள் நுழையக்கூடாது வெளியே செல்லுங்கள் என காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சமையல் பொருட்களை கொண்டு சென்று அன்னதானம் வழங்குவதற்காக செய்திருந்த பொருட்கள் அனைத்தையும் காவல்துறையினர் அடாவடி செய்து வாகனத்தில் ஏற்றி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மனம் நொந்த தம்பதியினர் மீண்டும் கோவிலுக்கு அருகே உள்ள மண்டபம் ஒன்றில் அன்னதானம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். சமூக நீதி என்று சொல்லக்கூடிய திராவிட மாடல் ஆட்சியில் அன்னதானம் வழங்குவதற்கு கூட சாதி மதம் பார்த்து செயல்பட்டு வருவதாகவும், அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கோவிலில் இது போன்ற சாதிய பிரச்சனைகள் வருடம் தோறும் ஏற்படுவதாக இதனை அரசு நடவடிக்கை மேற்கொண்டு அடாவடியில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும் அன்னதானம் வழங்குவதற்கு தடையாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர்.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

9 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

10 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

11 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

12 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

12 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

12 hours ago

This website uses cookies.