பள்ளி மாணவர்கள் கையில் வண்ணங்களிலான சாதிக்கயிறுகளை கட்ட தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு காமராஜர் பேத்தி கமலிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்குநேரியில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி இது போன்ற ஒரு சம்பவம் இனியும் தமிழ்நாட்டில் தொடரக்கூடாது என்ற அக்கறையில் இந்தக் கோரிக்கையை வைப்பதாக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பேத்தி தெரிவித்துள்ளார்.
சாதி என்பதே இருக்கக் கூடாது என்பது தான் தனது தனிபட்ட கருத்து என்றும் கூறிய அவர், சாதிக்கயிறுகள் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், முதலமைச்சர் ஸ்டாலினும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக காமராஜர் பேத்தி கமலிகா தெரிவித்துள்ளார்.
கமலிகா காமராஜ் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருப்பதும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சீட் எதிர்பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை மக்களவைத் தொகுதியை கமலிகா காமராஜ் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் நெல்லையை மையமாக வைத்து அரசியல் பணிகளில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.