சிவகங்கை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடிக்கும் தண்ணீரில் செல்பி மக்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பட்டமங்கலம் செல்லும் சாலையில் கொட்டகுடி ஆற்று பாலத்தின் அருகில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து 20 அடி உயரம் வரை தண்ணீர பீச்சி அடித்து வருகிறது.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள வயல்வெளிலும் கிராம பகுதியில் தேங்கி நிற்கிறது. பட்டமங்கலத்தில் இருந்து சொக்கநாதபுரம் செல்லும் அப்பகுதி மக்கள் இதை வேடிக்கை பார்ப்பதும், செல்பி எடுப்பதும் புகைப்படம் எடுப்பதுமாக ரசித்துச் செல்கின்றனர்.
குடிநீருக்காக பலரும் அவதி அடைந்து வரும் நிலையில், தண்ணீர் வீணாகி செல்வது காண்போரை வேதனையை உண்டாக்கியுள்ளது.
எனவே காவேரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் இதுபோன்ற குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
This website uses cookies.