தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை: சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி பாஜக எம்பியிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை எழும்பூர் அலுவலகத்தில் ஆஜரான எம்பி செல்வகணபதியிடம், சுமார் 10 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த 2024 ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையம் வந்த நெல்லை விரைவு ரயிலில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக 4 கோடி ரூபாய் பணத்துடன் மூன்று பேர் பிடிபட்டனர். இவ்வாறு பிடிபட்ட நபர்கள், நெல்லை மக்களவையில் போட்டியிட்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான, சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும், அந்தப் பணத்தை நயினார் நாகேந்திரனுக்கான தேர்தல் செலவுக்காக எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இதனை நயினார் மறுத்தார். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மறும் தொழில் பிரிவு மாநிலத் தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!
இந்த நிலையில், புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான செல்வகணபதி, சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கஜ் லால்வாணி மற்றும் சூரஜ் ஆகிய மூன்று பேரும், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.