கோவை ; பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி உடுமலை சாலை நல்லாம்பள்ளி பிரிவு அருகே பழனியில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த அய்யாசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விபத்து குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தில் பலியான அய்யாசாமியின் உடல் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், “பொள்ளாச்சி உடுமலை சாலையில் அதிக வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து விழிப்புணர்வு செய்து வருகிறோம்,” என தெரிவித்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.