கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமான சித்ரதுர்காவில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் ஆட்டோ ஒன்று நசுங்கிய காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒரு பேருந்து அதன் முன்னே சென்றுகொண்டிருந்த ஆட்டோவிற்கு பின்னால் வந்து வேகமாக மோதி தள்ள, அந்த ஆட்டோ முன்னால் உள்ள ஒரு பேருந்தின் பின்புறத்தில் மோதி நசுங்கியது.
அந்த ஆட்டோவில் டிரைவருடன் சில பயணிகளும் இருந்தனர். இச்சம்பவம் நடந்த மறு வினாடியே அங்கிருந்த மக்கள் பதறியடித்து ஆட்டோவில் உள்ளவர்களை காப்பாற்ற ஓடினார்கள். அந்த வகையில் டிரைவர் உட்பட ஆட்டோவில் பயணித்த பயணிகள் என மொத்தம் 4 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்கள் அனைவரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் மரணத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சிசிடிவி வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.