தேநீர் கடையில் வாங்கிய வடையில் பூரான் இருந்ததால் கேள்வி கேட்ட வாடிக்கையாளரிடம் அலட்சியமாக பதில் சொன்னதால் ரெய்டு வந்த அதிகாரிகள்
திண்டுக்கல் என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா. இவர் தனது உறவினர் அஸ்வதி மற்றும் தனது மகனை அழைத்துக் கொண்டு NGO காலனி மெயின் ரோட்டில் உள்ள ஜம்ஜம் தேநீர் கடையில் வடை கேட்டுள்ளனர்.
கடையில் பணி செய்பவர்கள் வடையில் குருமா ஊற்றி கொடுத்துள்ளனர் தனது மகனுக்கு வாங்கிய வடையை ஊட்டியுள்ளார் அப்போது வடையில் பூரான் இருந்ததைப் பார்த்த பியூலா மற்றும் அஸ்வதி இருவரும் கடை உரிமையாளரிடம் வடையில் பூரான் இருந்தது பற்றி கேட்டுள்ளனர்.
அப்போது கடை உரிமையாளர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியுள்ளார். உங்கள் வீட்டில் பூரான் இல்லையா என பேசியுள்ளார்.
இதையடுத்து பியூலா தனது மகனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என பயத்தில் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகனை சேர்த்துள்ளார் மேலும் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கூறியுள்ளார்
இதை எடுத்து திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜம்ஜம் பேக்கரிக்கு நேரில் சென்று வடைக்கு தயார் செய்யப்பட்ட மாவு மற்றும் அதன் குருமா உள்ளிட்டவைகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு மீதி இருந்ததை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் பொதுமக்கள் சாப்பிடும் உணவுகள் தரமாக உள்ளதா என அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அப்படி ஆய்வு செய்தால் மட்டுமே உணவு தரமான உணவாக பொதுமக்களுக்கு கிடைக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.