Categories: தமிழகம்

இது பண்டிகை காலம்… பொதுமக்களுக்குத் தான் சிரமம்… தொழிற்சங்கங்களின் பிரச்சனையை தீர்த்து விடுங்க ; அமைச்சர் முருகன் வலியுறுத்தல்

அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் ஏழை எளிய மக்கள் வளர வேண்டும் என பாரத பிரதமர் கடுமையாக உழைத்து வருகிறார் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தண்டுகாரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் நிகழ்ச்சியில் இன்று மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார்.

அப்போது, மத்திய அரசின் நலத்திட்டங்கள் கீழ் சுகாதாரத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். பின்னர், பொதுமக்களுடன் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரத யாத்திரை செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் விதமாக இந்த யாத்திரை செயல்பட்டு வருகிறது.

அனைத்து மக்களுக்கும் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கியின் மூலமாக சிறு, குறு தொழிலாளர்களுக்கு தங்களது தொழிலை வளர்த்துக் கொள்ள கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2047 ஆம் ஆண்டு நமது பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற்றுவதற்கு பிரதமர் கடுமையாக உழைத்து வருகிறார். அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம்.

இந்த உத்தரவாத வாகனம் ஆனது அனைத்து கிராம பகுதிகளிலும் ,டவுன் பகுதிகளிலும் சென்று மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற உதவியாக இருந்து வருகிறது . தமிழ்நாட்டிற்கு மட்டும் கடந்த 9 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் காண நலத்திட்டங்களை நமது பாரத பிரதமர் வழங்கி உள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் ஏழை எளிய மக்கள் வளர வேண்டும், அவர்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என பாரத பிரதமர் உழைத்து வருகிறார், என கூறினார்.

மேலும், பயனாளிகளுக்கு மத்திய அரசின் உஜ்வாலா, ஆயுஷ்மான் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 6.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களின் சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் மாநில அரசு கோரிக்கைகள் குறித்து விரைந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

20 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.