Categories: தமிழகம்

இந்தியை கற்றுக்கொள்வதில் தவறில்லை.. ஆனால் கட்டாயமாக்குவதுதான் தவறு : மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு!!

திருவாரூர் : இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மோடி@20 புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் சேர்மன் கனகசபாபதி மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது, இந்தி மொழி தமிழகத்தில் அவசியமா என்ற கேள்விக்கு, தமிழ் மொழி தாயைப் போன்றது அதனை என்றும் நாம் மறக்க முடியாது. தாய் மொழி இல்லை என்றால் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

அதே நேரத்தில் இந்தியாவில் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொழுது இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என்பது என்னுடைய கருத்து. மேலும் கூறுகையில் நாளை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு தொடங்குகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 534 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் நம்முடைய கிராமத்து மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் தேர்வு எழுதுவதற்கு நாம் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். 10 தினங்களுக்கு இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 30 முதல் 40% வரை வெளி மாநில மாணவர்கள் பயின்று வருகின்றனர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள் பயின்று வருகிறார்கள் மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தேவையான நுழைவுத் தேர்வு குறித்த பாடம் எடுக்கப்படுகிறது.

ஆனால் அது நம்மிடம் இல்லை. அதே நேரத்தில் இந்த வருடம் மத்திய பல்கலைக்கழகத்தில் அதனை தொடங்கியுள்ளோம். தமிழ் மொழி மூலம் தேர்வு எழுதும் வசதியை தொடங்கி உள்ளோம். நுழைவுத் தேர்வை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள்.

ஆனால் இவர்களுடைய மதிப்பெண்கள் வேறு வேறாக உள்ளன. அவர்களை ஒருங்கிணைப்படுத்துவதற்கு ஒரு நுழைவுத் தேர்வு தேவைப்படுகிறது. இந்த முறை தமிழகத்தில் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டங்களுக்கு நிகராக தமிழக மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்வி கிராமங்களுக்கு சென்று போய் சேர வேண்டும் கிராமத்தில் உயர் கல்வி இல்லை என்றால் அந்த உயர் கல்வி இந்த நாட்டிற்கு தேவை இல்லை அது தான் என்னுடைய கருத்து என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

17 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

18 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

18 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

18 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

19 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

20 hours ago

This website uses cookies.