பூந்தோட்டத்தில் அதிகாலையில் பூ பறித்துக்கொண்டிருந்த மூதாட்டியின் வாயை மூடி தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காளவாய் பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி 70 வயதுடைய சின்னம்மாள்.
இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டருகே உள்ள தனது சம்பங்கி பூ தோட்டத்தில் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக பூ பறித்துக்கொண்டிருந்தார்.
அப்போது பூந்தோட்டத்தில் பதுங்கி இருந்த மர்ம நபர் ஒருவர் சின்னமாளின் வாயை மூடிக்கொண்டு அவர் அணிந்திருந்த 9 சவரன் தாலி செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அப்போது சின்னம்மாள் சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபரை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அந்த மர்ம நபர் அங்கிருந்த வயல்வெளியில் குதித்து தலைமறைவாகி தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து சின்னம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வலை வீசி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.