கனடாவில் நடைபெற்ற பிடே செஸ் தொடரில் நெருக்கடியான சூழ்நிலையில் வெற்றியை தக்க வைத்து சாம்பியன் பட்டத்தை வென்றார் இளம் செஸ் வீரரான குகேஷ்.
இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் அவர் இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று நடப்பு உலக செஸ் சாம்பியனான சீன க்ராண்ட்மாஸ்டரான டிங் லிரினுடன் மோதவுள்ளார்.
இதற்கு முன் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான கேரி கேஸ்பரோவ் தனது 22-வது வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது. தற்போது இந்த சாதனையை 40 ஆண்டுகளுக்குப் பிறகு குகேஷ் தனது 17-வது வயதில் முறியடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
மேலும், தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாத் ஆனந்துக்கு அடுத்த படியாக ஒரு தமிழக வீரர் செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் குகேஷ். இதனால் அவருக்கு வாழ்த்து மழை குவிந்து கொண்டே வந்தது. இந்நிலையில், இன்றைய நாளில் குகேஷ் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இருவரும் செஸ் வீரர் குகேஷுக்கு அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், குகேஷுக்கு 75 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.