அடுத்த 4 நாட்களுக்கு தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
28 January 2021, 5:02 pmசென்னை: கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
0
0