Categories: தமிழகம்

முதல் மனைவியை ஏமாற்றி 2வது மனைவியுடன் உல்லாச வாழ்க்கை.. விமான நிலையத்தில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

திருச்சி லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்(வயது 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக கோவையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு பவித்ரா என்ற பெண்ணும் அதே ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்த பாலகுமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பவித்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இரண்டாவது மனைவியை அழைத்துக்கொண்டு ரகசியமாக பெருவளநல்லூருக்கு திரும்பி வந்துள்ளார். அங்கே வேறு ஒரு வீட்டில் பவித்ராவை தங்க வைத்து, முதல் மனைவிக்கு தெரியாமல் வாழ்க்கை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் எப்படியோ தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி கேள்விப்பட்ட முதல் மனைவி இளவரசி இது குறித்து லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனை தெரிந்து கொண்ட பாலகுமார் வெளிநாடு தப்பி சென்று விட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ஏர்போர்ட் இமிகிரேஷனில் இது குறித்து போலீசார் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் கத்தார் நாட்டில் இருந்து பாலகுமார் திரும்பி வந்துள்ளார்.

அவர் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருப்பதால், அவரை பிடித்த திருச்சி விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள், இது குறித்து லால்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விமான நிலையம் சென்று அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் கார்த்தியகினி, சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி காவலர்கள் சுஜாதா நந்தினி கலைச்செல்வி ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாலகுமாரை சிறையில் அடைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

10 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

11 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

12 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

13 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

13 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

13 hours ago

This website uses cookies.