செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள எல்.என்.புறம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால் இவரது மகன் பவித்ரன்(17). இவர் படாளம் பகுதியில் உள்ள MCSM அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி வகுப்பு முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள படாளம் ரயில்வே நிலையத்தில் தனது இரு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பொழுது ரயிலின் முன்பு தவறி விழுந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த படாளம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், மாணவன் பவித்திரன் பயன்படுத்திய செல்போன் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மாணவன் பவித்திரன் உடன் இருந்த நண்பர்கள் யார் எனவும், அவர்கள் இன்ஸ்டா மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களுக்கு செல்பி எடுக்கும்பொழுது தவறி விழுந்தாரா..? என ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.