செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள எல்.என்.புறம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால் இவரது மகன் பவித்ரன்(17). இவர் படாளம் பகுதியில் உள்ள MCSM அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி வகுப்பு முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள படாளம் ரயில்வே நிலையத்தில் தனது இரு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பொழுது ரயிலின் முன்பு தவறி விழுந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த படாளம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், மாணவன் பவித்திரன் பயன்படுத்திய செல்போன் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மாணவன் பவித்திரன் உடன் இருந்த நண்பர்கள் யார் எனவும், அவர்கள் இன்ஸ்டா மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களுக்கு செல்பி எடுக்கும்பொழுது தவறி விழுந்தாரா..? என ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.