சென்னை : ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை அழைத்து சென்று குடும்பம் நடத்திய நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் மடுமா நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் அளித்திருந்தார். அதில் தனது 17 வயது மகளை வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் ( எ) ராஜேஷ் (30) என்ற நபர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது ராஜேஷ் தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில், தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில் வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தில் வைத்து அவரை பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.