சென்னை : ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை அழைத்து சென்று குடும்பம் நடத்திய நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் மடுமா நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் அளித்திருந்தார். அதில் தனது 17 வயது மகளை வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் ( எ) ராஜேஷ் (30) என்ற நபர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது ராஜேஷ் தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில், தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில் வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தில் வைத்து அவரை பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.