சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் உள்ள வழக்கறிஞரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தாம்பரம் மீனாம்பாள் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் தியாகராஜன். இவருக்கு பிரியா என்ற மனைவியும், விஷால் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை 3 பேரும் வீட்டில் இருந்த நிலையில், வீட்டில் இருந்த கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து கண்ணாடி உடைந்து விழுந்தது தெரிய வந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் தியாகராஜன், உடனே தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தடய அறிவியல் நிபுணர்களையும் வரவழைத்து ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, துப்பாக்கி குண்டை கைப்பற்றிய போலீசார், துப்பாக்கிக் குண்டு எந்த வகையைச் சேர்ந்தது? என்பது குறித்தும், குண்டு எங்கிருந்து வந்தது? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிக் குண்டு ஏகே 47 ரகத் துப்பாக்கி குண்டாக இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.