அடேங்கப்பா… சென்னை மாநகராட்சியில் சொத்துவரி இவ்வளவு உயர்வா..? யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
2 April 2022, 9:09 am
Quick Share

சென்னை : சென்னை உள்பட மாநகராட்சிகளுக்கு சொத்து வரி உயர்வு பற்றி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ இதர 20 மாநகராட்சிகளில்‌ சொத்து மதிப்பு 2022-23-ஆம்‌ நிதியாண்டில்‌ உயர்த்தப்படுகிறது. சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின்‌ அறிக்கையின்படி, சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதியில்‌ 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும்‌, சென்னையோடு 2011-இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ 25 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது.

சென்னையில்‌ 600-1200 சதுர அடி குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும்‌, 1201-1800 சதுர அடி குடியிருப்புகளுக்கு 100 சதவீதமும்‌, 1801 சதுர அடிக்கு உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 150 சதவீதமும்‌ உயர்த்தப்படும்‌. சென்னையோடு 2011-இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ 600-1200 சதுர அடி குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும்‌, 1201-1800 சதுர அடிகுடியிருப்புகளுக்கு 75 சதவீதமும்‌, 1801 சதுர அடிக்கு மேலுள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 100 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது.

சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதிகளில்‌ வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, சென்னையோடு 2011-இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழில்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம்‌ சொத்து வரியை உயர்த்தவும்‌ குழு பரிந்துரைத்துள்ளது.

மாநகராட்சிகளின்‌ சொத்து வரி உயர்வு தொடர்பான குழுவின்‌ பரிந்துரையை ஏற்று, அரசு அதனை செயல்படுத்திட சம்பந்தப்பட்ட மாநகராட்சியின்‌ மாமன்றம்‌ மூலம்‌ நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 733

0

0