சென்னை : பூந்தமல்லி அருகே குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பூந்தமல்லி ராமானுஜர் கூடம் தெருவில் தனியார் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியிருந்து கல்லூரி மற்றும் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி அந்த மகளிர் விடுதியின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி என்பவர் மீட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லி போலீசா விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விடுதியில் தங்கியிருந்த பெண்ணும், அவரது காதலனும் குழந்தையை குப்பைத் தொட்டியில் தாங்கள் தான் வீசியதாகக் கூறி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.
இவர்களின் டிஎன்ஏ குழந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறதா..? என்று பரிசோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காதல் ஜோடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.