சென்னை : பூந்தமல்லி அருகே குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பூந்தமல்லி ராமானுஜர் கூடம் தெருவில் தனியார் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியிருந்து கல்லூரி மற்றும் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி அந்த மகளிர் விடுதியின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி என்பவர் மீட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லி போலீசா விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விடுதியில் தங்கியிருந்த பெண்ணும், அவரது காதலனும் குழந்தையை குப்பைத் தொட்டியில் தாங்கள் தான் வீசியதாகக் கூறி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.
இவர்களின் டிஎன்ஏ குழந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறதா..? என்று பரிசோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காதல் ஜோடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.