சென்னை : பூந்தமல்லி அருகே குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பூந்தமல்லி ராமானுஜர் கூடம் தெருவில் தனியார் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியிருந்து கல்லூரி மற்றும் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி அந்த மகளிர் விடுதியின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி என்பவர் மீட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லி போலீசா விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விடுதியில் தங்கியிருந்த பெண்ணும், அவரது காதலனும் குழந்தையை குப்பைத் தொட்டியில் தாங்கள் தான் வீசியதாகக் கூறி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.
இவர்களின் டிஎன்ஏ குழந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறதா..? என்று பரிசோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காதல் ஜோடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.