சென்னை: பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :- நேற்று நள்ளிரவு பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியிருப்பது கண்டிக்கதக்கது. இது ஏற்புடையதல்ல. இது சம்பந்தமாக காவல்துறை ஒருவரை கைது செய்து இருக்கிறது. மேலும் இச்செயலில் ஈடுப்பட்டு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்செயல் மேலும் தொடராமல் இருப்பதற்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.