சென்னை – திருவொற்றியூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
திருவொற்றியூர் சேஷாசலாகிராமணி தெருவைச் சேர்ந்த டேவிட் என்பவரது மகன் கரண் (19). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து வந்தார். இதனால், அதற்கான பயிற்சியும் அவர் மேற்கொண்டு வந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனது அறைக்குள் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர், பலமுறை கதவை தட்டிப்பார்த்தும் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்கள், ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் கரண் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அறையில் இருந்த கரண் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில், அதில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது.
இதனால், போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், கரண் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்..? தற்கொலைக்கு முன்பு அவர் தனது செல்போனில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்தது ஏன்..? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.