தனியார் நிறுவன அபகரிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அமைச்சரின் மருமகன் உள்பட 6 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த இசக்கியம்மாள் (42) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் பெயர் மோகன். கடந்த 2021ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமாகி விட்டார். அவர் உயிருடன் இந்த போது, 2014-ல் அவரின் நெருங்கிய நண்பர்களான சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கும் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன் மற்றும் திவாகர் ஆகிய 6 பேருடன் சேர்ந்து தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
அனைவரும் பங்குதாரர்களாகி அதை தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். தற்போது, என் கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், அதனை சாதகமாக்கி, அவருடைய பங்கை வாரிசுதாரர் என்ற அடிப்படையில் எனக்கும், எனது மகளுக்கும் வழங்காமல், போலி கணக்குகளை காண்பித்து, மோசடி செய்து விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவரது புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இசக்கியம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகளின் உத்தரவுப்படி, துணை மேயர் மகேஷ்குமார், அமைச்சரின் மருமகன் குணசேகரன் உள்ளிட்ட 6 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.